Versions
TOV அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.
IRVTA அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்த நாளில்தானே அதற்குள் நுழைந்தார்கள்; இதோ, என்னுடைய ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.
ERVTA அவர்கள் தம் விக்கிரகங்களுக்காகக் குழந்தைகளைக் கொன்றார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான இடத்திற்குச் சென்று அவற்றையும் அருவருப்பானதாக ஆக்கினார்கள்! அவர்கள் இதனை என் ஆலயத்திற்குள் செய்தார்கள்!
RCTA தங்கள் பிள்ளைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டு விட்டு, அப்படியே நமது பரிசுத்த இடத்தினுள் நுழைந்து, அதைப் பங்கப்படுத்தினார்கள்; ஆம் அதனுள் நுழைந்து இத் தீய செயல்களையெல்லாம் நமது வீட்டின் நடுவில் செய்தார்கள்.
ECTA அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டனர். என் தூயகத்தில் நுழைந்து அதை இழிவுபடுத்தினர். என் இல்லத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.