Versions
TOV அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்;
IRVTA அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், ஐபிராத் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்;
ERVTA பின்பு யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்: பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம் மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர்.
RCTA அவர்கள் ஆண்டவர் திருமுன் வந்து நின்றனர். அப்பொழுது அவர் எல்லா மக்களையும் நோக்கி "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் திருவாய் மலர்ந்து அருள்வதாவது: 'முன்னாளில் உங்கள் முன்னோராகிய ஆபிரகாமுக்கும் நாக்கோருக்கும் தந்தையான தாரே நதிக்கப்புறத்தில் குடியிருந்த போது அவர்கள் அந்நிய தேவர்களை வழிபட்டு வந்தனர்.
ECTA யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது; "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; "முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.