Versions
TOV அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோகும்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
IRVTA அதின் கிளைகள் உலரும்போது ஒடிந்துபோகும்; பெண்கள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள மக்களல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபை செய்யாமலும் இருப்பார்.
ERVTA திராட்சைக் கொடிகள் உலர்ந்துபோகும். அவற்றின் இலைகள் ஒடிந்துபோகும். பெண்கள் அக்கிளைகளை விறகாகப் பயன்படுத்துவார்கள். ஜனங்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள். எனவே, அவர்களை உருவாக்கிய தேவன் ஆறுதல் செய்யமாட்டார். அவர்களை உண்டாக்கியவர் அவர்களிடம் கருணையோடு இருக்கமாட்டார்.
RCTA அதன் கிளைகள் காய்ந்து முறிக்கப்படும், பெண்கள் வந்து அவற்றை விறகுக்குப் பயன்படுத்துவர்; ஏனெனில் அவர்கள் விவேகமற்ற மக்கள், ஆதலால் அவர்களைப் படைத்தவர் அவர்களுக்கு இரக்கம் காட்டார், அதை உருவாக்கினவர் அதனை விட்டு வைக்கமாட்டார்.
ECTA உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன; பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்; ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது; ஆதலால், அவர்களைப் படைத்தவர் அவர்கள் மீது இரக்கம் காட்டார்; அவர்களை உருவாக்கியவர் அவர்களுக்கு ஆதரவு அருளார்.