Versions
TOV நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
IRVTA நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
ERVTA யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தர் கூறவதைக் கேட்காவிட்டால், உங்களது வீண்பெருமை எனது அழுகைக்குக் காரணம் ஆகும். நான் என் முகத்தை மறைத்து மிகக் கடுமையாக அழுவேன். எனது கண்கள் கண்ணீரால் நிரம்பும், ஏனென்றால், கர்த்தருடைய மந்தை சிறைப்பிடிக்கப்படும்.
RCTA ஆனால் நீங்கள் இதனைக் கேளாவிடில், உங்கள் இறுமாப்புக்காக என் உள்ளம் மறைவில் அழும்; என் கண்கள் கலங்கிக் கண்ணீர் விடும்; ஏனெனில் ஆண்டவரின் மந்தை அடிமையாய்ப் பிடிபட்டது.
ECTA ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்; அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்; எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.