Bible Versions
Bible Books

Jeremiah 12:4 (AKJV) American King James Version

Versions

TOV   எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
IRVTA   எதுவரை தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்புக்காக மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லை என்கிறார்கள். PS
ERVTA   இந்தப் பூமி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வறண்டிருக்கும்? இந்தப் புல் நிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காய்ந்து மடிந்திருக்கும்? இந்தப் பூமியிலுள்ள மிருகங்களும், பறவைகளும், செத்திருக்கின்றன. இது தீய ஜனங்களின் குற்றமாகும், எனினும் அத்தீய ஜனங்கள், "எரேமியா நமக்கு நிகழப்போவதைப் பார்க்க நீண்டகாலம் உயிர்வாழமாட்டான்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
RCTA   எத்தனை நாட்களுக்கு நாடு அழுகையில் மூழ்கியிருக்கும்? எந்நாள் வரையில் பூமியின் புற்களெல்லாம் உலரும்? நாட்டுக் குடிகள் செய்த கொடுமையின் காரணமாய் மிருகங்களும் பறவைகளும் அழிக்கப்பட்டன; ஏனெனில் மனிதர்கள், "நமது இறுதி முடிவை அவர் காணமாட்டார்" என்று சொன்னார்கள்.
ECTA   எவ்வளவு காலம் மண்ணுலகம் புலம்பிக் கொண்டிருக்கும்? வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம் வாடிக் கிடக்கும்? மண்ணுலகில் குடியிருப்போர் செய்த தீமைகளின் காரணமாக, விலங்குகளும் பறவைகளும் அழிந்து போயின; "நம் செயல்களைக் கடவுள் காண்பதில்லை" என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us