Versions
TOV எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
IRVTA எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு;
ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு;
எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
ERVTA எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு! உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று! கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று! கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு. உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள். பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள். நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
RCTA கோப்: எழுந்திரு, இரவில் முதற் சாமத்தின் தொடக்கத்திலேயே குரலெழுப்பு; ஆண்டவரின் திருமுன் உன் இதயத்தை வழிந்தோடும் தண்ணீராய் வார்த்திடுக! தெரு தோறும் மூலையினில் பசியால் வாடி மயங்கிடும் உன் மக்களின் உயிருக்காக உன்னுடைய கைகளை மேலுயர்த்தி அவரிடத்தில் இப்பொழுது இறைஞ்சிடுவாய்.
ECTA எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெருமுனையில் பசியால் விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!