Versions
TOV கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
IRVTA கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களை முட்டி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
ERVTA கெனானாவின் மகனான சிதேக்கியா தனக்கு இரும்பு கொம்புகளைச் செய்தான். அவன், "இதுதான் கர்த்தர் சொன்னது: நீ இந்த இரும்பு கொம்புகளை அணிந்துக் கொண்டு அராமியரை அழிந்துபோகும்வரை தாக்குவாய்" என்றான்.
RCTA அவ்வேளையில் கனானாவின் மகன் செதேசியாஸ். இரும்புக் கொம்புகளைச் செய்து, "இவற்றால் நீர் சீரியரை நெருக்கி அழித்துப் போடுவீர் என்று ஆண்டவர் சொல்லுகிறார்" என்றான்.
ECTA அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, "இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அழித்துவிடுவீர்" என்று ஆண்டவர் கூறுகிறார்" என்றான்.