Versions
TOV பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.
IRVTA பெத்தேலில் இருக்கிற அந்த பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனிதன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன்னுடைய கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாக நீட்டின கை தன்னிடமாக மடக்கமுடியாதபடி மரத்துப்போனது.
ERVTA அரசனான யெரொபெயாம் பெத்தேலின் பலிபீடத்தைப்பற்றி தேவமனிதனிடமிருந்து செய்தியைக் கேட்டான். அவன் தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டி, "அவனை பிடியுங்கள்!" என்றான். ஆனால் நீட்டிய அந்தக்கை, மடக்க முடியாத அளவிற்கு முடங்கிப்போனது.
RCTA பேத்தலில் இருந்த அப்பலிபீடத்திற்கு எதிராய்க் கடவுளின் மனிதர் கூறின வார்த்தையை அரசன் எரோபோவாம் கேட்டவுடன் பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, "அவனைப் பிடியுங்கள்" என்றான். அவருக்கு எதிராய் அரசன் நீட்டிய கை மரத்துப் போக அவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
ECTA பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, "அவனைப் பிடியுங்கள்" என்றான். கை விறைத்து நின்று விட்டது; அதை அவனால் மடக்க முடியவில்லை.