Versions
TOV இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
IRVTA இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசும்போது, பெலிஸ்தர்களின் முகாமில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
ERVTA சவுல் ஆசாரியனாகிய அகியாவிடம் பேசிக்கொண்டே தேவனுடைய ஆலோசனைக்குக் காத்திருந்தான். பெலிஸ்தர்களின் முகாமில் கூச்சலும் குழப்பமும் மிகுந்தன. இதனால் சவுல் பொறுமையை இழந்து, ஆசாரியனாகிய அகியாவிடம், "இது போதும்! உன் கைகளைத் தளர்த்தி ஜெபத்தை நிறுத்து!" என்றான்.
RCTA சவுல் குருவிடம் பேசிக் கொண்டிருக்கையில், பிலிஸ்தியர் பாளையத்தில் பெரும் முழக்கம் எழும்பிற்று. அது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து வெகு தெளிவாய்க் கேட்டது. அப்போது சவுல், "உம் கையை மடக்கும்" என்று குருவுக்குச் சொன்னார்.
ECTA குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்ந்து மிகுதியாயிற்று. சவுல் குருவிடம் உன் கையை விலக்கிக் கொள்" என்றார்.