Versions
TOV அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
IRVTA அப்பொழுது சவுல்: ராஜா சீதனத்தை விரும்பாமல், பெலிஸ்தர்களின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் எதிரிகளிடத்தில் பழிவாங்க விருப்பமாக இருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தர்களின் கையினால் விழச்செய்வதே சவுலுடைய எண்ணமாக இருந்தது.
ERVTA சவுல் அவர்களிடம், "அரசன் உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்" என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.
RCTA அதைக் கேட்டுச் சவுல், "நீங்கள் அவனைப் பார்த்து, 'அரசருக்குப் பரிசம் அவசியமில்லை; அரசருடைய எதிரிகளைப் பழிவாங்கிப் பிலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டு வந்தால் போதும்' என்று சொல்லுங்கள்" என்றார். ஏனெனில் தாவீதை பிலிஸ்தியரின் கையில் ஒப்படைக்கச் சவுல் எண்ணியிருந்தார்.
ECTA பின்பு சவுல், "தாவீதிடம் இவ்வாறு நீங்கள் சொல்லுங்கள்; "அரசர் திருமணப் பரிசம் ஏதும் விரும்பவில்லை; அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கெண்டுவந்தால் போதும்" என்று சொல்லுங்கள் என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவுலின் திட்டம்.