Bible Versions
Bible Books

Exodus 15:19 (NLV) New Life Verson

Versions

TOV   பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.
IRVTA   பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும்
குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது;
யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்;
இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
ERVTA   ஆம், அது உண்மையாகவே நிகழ்ந்தது! பார்வோனின் குதிரைகளும், வீரர்களும், இரதங்களும் கடலுக்குள் அமிழ்ந்தன. கடலின் ஆழத்து தண்ணீரை அவர்களுக்கு மேலாகக் கர்த்தர் கொண்டு வந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடலினூடே உலர்ந்த தரையில் நடந்தனர்.
RCTA   ஏனென்றால், பாரவோன் குதிரை வீரனாய்த்தன் தேர்களோடும் குதிரை வீரரோடும் கடலில் புகுந்தான். ஆண்டவர், கடல் அலைகளை அவர்கள்மேல் திரும்பச் செய்தார். இஸ்ராயேல் மக்களோ கடலின் நடுவில் கால் நனையாமல் நடந்து போயினர்.
ECTA   பார்வோனின் குதிரைகள், தேர்கள் குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us