Versions
TOV நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.
IRVTA நீ அவர்களுடன் அடக்கம் செய்யப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் மக்களைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் கனமடைவதில்லை.
ERVTA மற்ற அரசர்கள் பலர் மரித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தம் சொந்தக் கல்லறைகளை வைத்துள்ளனர். ஆனால், நீ அவர்களோடு சேரமாட்டாய். ஏனென்றால், நீ உன் சொந்த நாட்டை அழித்துவிட்டாய். நீ உன் சொந்த ஜனங்களைக் கொன்றாய். நீ செய்ததுபோல உன் பிள்ளைகள் தொடர்ந்து, அழிவு வேலைகளைச் செய்யமாட்டார்கள். உன் பிள்ளைகள் நிறுத்தப்படுவார்கள்.
RCTA அவர்களோடு சேர்த்து உன்னை அடக்கம் செய்ய மாட்டார்கள், ஏனெனில் உனது நாட்டை நீ பாழாக்கினாய், உன் நாட்டு மக்களை நீ கொன்று போட்டாய். "தீமை செய்வோர் சந்ததியின் பெயர் எந்நாளும் சொல்லப்படாது,
ECTA கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்; ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்; உன் மக்களைக் கொன்று போட்டாய்; தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.