Versions
TOV இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
IRVTA இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாக இராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசிக்காமலும், யெகோவாவே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
ERVTA "பகலில் இனி சூரியன் உனக்கு வெளிச்சத்தைத் தராது. இரவில் சந்திரன் இனி உனக்கு வெளிச்சத்தைத் தராது. ஏனென்றால், என்றென்றும் கர்த்தரே உனக்கு வெளிச்சமாய் இருப்பார். உனது தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
RCTA பகலில் வெளிச்சந்தர உனக்குத் கதிரவன் தேவையில்லை, இரவில் உனக்கு ஒளி வீச வெண்ணிலவும் தேவையில்லை; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கடவுளே உனக்கு மகிமையாய் விளங்குவார்.
ECTA கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை!