Versions
TOV அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
IRVTA அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.
ERVTA சவுல் அவளிடம், "அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?" என்று கேட்டான். அதற்கு அப்பெண், "அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது" என்றாள். அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது.
RCTA அவர்களுடைய உருவம் என்ன?" என்று அவளைக் கேட்டார். அதற்கு அவள், "வயது முதிர்ந்த ஒருவர் எழுந்து வந்தார். அவர் ஒரு போர்வையால் மூடப்பட்டிருக்கிறார்" என்றாள். அவர் சாமுவேல் என்று சவுல் கண்டு கொண்டு முகம் தரையில் படக் குனிந்து வணங்கினார்.
ECTA அவர் அவளிடம் அதன் தோற்றம் என்ன? என்று கேட்க அவள் "முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார், என்றாள். அவர் சாமுவேல் தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.