Versions
TOV அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப்பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
IRVTA அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும்,
இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்;
அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு,
வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான். PEPS
ERVTA அந்த ஜனங்கள் சிங்கம் போன்று பலமுள்ளவர்கள். அவர்கள் சிங்கத்தை போன்றே சண்டையிடுவார்கள். அந்தச் சிங்கம் பகைவரை அடித்துத் தின்னும்வரை ஓய்வு எடுக்காது. தனக்கு எதிராக வந்த ஜனங்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை அது ஓய்வு எடுக்காது" என்றான்.
RCTA இதோ மக்கள் பெண் சிங்கமென எழும்புவர். தாடி சிங்கமென நிமிர்ந்து நிற்பர். தான் பிடித்த இரையை உண்டு, வெட்டுண்டவர்களின் செந்நீரைப் பருகுமட்டும், அது படுத்துக்கொள்ள மாட்டாது என்று சொன்னான்.
ECTA இதோ ஒரு மக்களினம்; அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது; ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை. "