Versions
TOV அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும் என்று சொன்னான்.
IRVTA அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“மோவாபின் ராஜாவாகிய பாலாக்
என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து:
நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்;
நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான்.
ERVTA பிறகு பிலேயாம் பின்வருமாறு சொன்னான்: மோவாபின் அரசனான பாலாக் என்னை இங்கே அழைத்து வந்தான். ஆராம் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தேன். பாலாக் என்னிடம், "வா, வந்து எனக்காக யாக்கோபிற்கு எதிராகப் பேச வேண்டும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்" என்று கேட்டான்.
RCTA பின் தன் மறைபொருளை உரைக்கத்தொடங்கி: மோவாபியரின் அரசனாகிய பாலாக் என்னை அராமினின்றும் கீழ்த்திசை மலைகளிலிருந்தும் வரவழைத்து: நீ வந்து யாக்கோபைச் சபிக்கவும் இஸ்ராயேலரை வெறுத்துப் பேசவும் வேண்டும் என்றான்.
ECTA பிலயாம் திருஉரையாகக் கூறியது; "ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான். "வா, எனக்காக யாக்கோபைச் சபி! வா, இஸ்ரயேலைப் பழித்துரை!" என்கிறான்.