Versions
TOV ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,
IRVTA ஆண்டவர் சீரியர்களின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நமக்கு எதிராகப் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் கூலிக்கு அமர்த்தினான் என்று சொல்லி,
ERVTA ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், "ஏத்திய மற்றும் எகிப்திய அரசர்களின் துணையுடன் இஸ்ரவேல் அரசன் நம்மோடு போர் செய்யவருகிறான்!" என்று பேசிக் கொண்டனர்.
RCTA ஏனெனில், ஆண்டவர் சீரியர் பாசறையில் குதிரைகளும் தேர்களும் பெரும் படையும் திரண்டு வருவது போன்ற பெரும் சத்தம் கேட்கும்படி செய்திருந்தார். சீரியர் இதைக் கேட்டு ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ! இஸ்ராயேல் அரசன் தனக்குத் துணையாக ஏத்தையர் அரசனையும், எகிப்தியர் அரசனையும் அழைத்துக் கொண்டு நம்மீது படையெடுத்து வருகிறான்" எனச் சொல்லிக் கொண்டு,
ECTA ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி 'தலைவர்' செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான்" என்று சொல்லிக்கொண்டனர்.