Versions
TOV ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,
IRVTA ஏனென்றால், தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ERVTA தேவ தூதர்கள் மூலமாக தேவனால் சொல்லப்பட்ட போதனை உண்மை என புலப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் அப்போதனைக்கு எதிராக யூதர்கள் எதையேனும் செய்தனர் அல்லது அதைப் பின்பற்றவில்லை என்ற ஒவ்வொரு முறையும் அதற்காக அவர்கள் சரியான முறையில் தண்டிக்கப்பட்டனர்.
RCTA ஏனெனில், வானதூதர் வாயிலாகத் தெரிவிக்கப்பட்ட திருச்சட்டமே கட்டுப்படுத்த வல்லதாய் இருந்ததென்றால். அதற்கு எதிரான எத்தகைய குற்றமும் கீழ்ப்படியாமையும் தக்க தண்டனையைப் பெற்றுக்கொண்டதென்றால், இத்துணைப் பெரிய மீட்பைப்பற்றிக் கவலையற்று இருப்போமானால் நாம் எப்படித் தப்பமுடியும்?
ECTA ஏனெனில் வானதூதர்வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது. அதை மீறிய எவரும், அதற்குக் கீழ்ப்படியாத எவரும் தகுந்த தண்டனை பெற்றனர்.