Versions
TOV அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
IRVTA பெருமைக்காரர்களையும் பொய்யைச் * தேவர்களையும் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல்,
யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
ERVTA ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான். பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
RCTA தன் நம்பிக்கையெல்லாம் ஆண்டவர் மீது வைத்தவனே பேறு பெற்றவன்: சிலைகளை வழிபடுவோரைப் பின்பற்றாதவன், பொய்யானவற்றில் மனத்தைச் செலுத்தாதவன்- இவனே பேறு பெற்றவன்.
ECTA ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர்.