Versions
TOV ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
IRVTA ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்திரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
ERVTA அவர்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். எனவே காட்டிலிருந்து ஒரு சிங்கம் வந்து அவர்களைத் தாக்கும். வனாந்தரத்திலிருந்து ஒரு நரி வந்து அவர்களைக் கொல்லும். அவர்களின் நகரங்களுக்கு அருகில், சிறுத்தை ஒளிந்துக்கொண்டிருக்கிறது. நகரத்திலிருந்து வெளியே வரும் எவரையும் அந்த சிறுத்தை துண்டுத் துண்டாகக் கிழித்துப்போடும். இது நிகழும் ஏனென்றால், யூதா ஜனங்கள் மீண்டும், மீண்டும், பாவம் செய்திருக்கிறார்கள். அவர்கள் பலமுறை கர்த்தரிடமிருந்து விலகி, அலைந்திருக்கிறார்கள்.
RCTA ஆதலால், காட்டுச் சிங்கம் அவர்களைக் கொன்றுவிடும்; பாலை நிலத்து ஓனாய் அவர்களை நாசமாக்கும்; வேங்கை அவர்கள் பட்டணங்கள் மீது கண்ணோக்குகிறது; அங்கிருந்து வெளியேறும் எவனையும் அது கிழித்தெறியும். ஏனெனில் அவர்களின் துரோகங்கள் மிகப் பல; அவர்கள் பல முறை ஆண்டவரை விட்டகன்றனர்.
ECTA எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்; அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்; என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.