Versions
TOV கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.
IRVTA யெகோவா, மகளாகிய சீயோனின் மதிலை நிர்மூலமாக்க நினைத்தார்;
நூலைப்போட்டார்; அழிக்காதபடி தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை;
அரண்களையும் மதிலையும் புலம்பச்செய்தார்;
அவைகள் முற்றிலும் பெலனற்றுக்கிடக்கிறது.
ERVTA சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார். அவர் ஒரு அளவு கோட்டை சுவரில் குறித்து, அதுவரை இடித்துப் போடவேண்டும் என்று காட்டினார். அவர் அழிப்பதிலிருந்து தன்னை நிறுத்தவில்லை. எனவே, அவர் அனைத்து சுவர்களையும் துக்கத்தில் அழும்படிச் செய்தார். அவை எல்லாம் முற்றிலும் ஒன்றுக்கும் உதவாது அழிந்துபோயின.
RCTA ஹேத்: சீயோன் மகளின் மதிற் சுவரை ஆண்டவர் தகர்த்திடத் தீர்மானித்தார். நூல் போட்டு எல்லைகளை வரையறுத்தார், அழிக்காமல் கையை மடக்க மாட்டார்; அரணும் அலங்கமும் புலம்பச் செய்தார், இரண்டும் ஒருமிக்கச் சரிந்து விழுகின்றன.
ECTA மகள் சீயோனின் மதிலை அழிக்க ஆண்டவர் திட்டமிட்டார்; அதற்கென நூலினால் அளந்தார்; அதை அழிப்பதை நிறுத்தத் தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை; அரணும் மதிலும் புலம்பச் செய்தார்; அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.