Versions
TOV அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
IRVTA அப்பொழுது அவளுடைய கணவன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாமல் இருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.
ERVTA அவளது கணவன் அந்த வேண்டுதலை அறிந்து அதற்க்கு ஒப்புக் கொண்டுவிட்டால் அவள் அதை நிறைவேற்ற வேண்டும்.
RCTA (8) அவள் கணவன் அதைக் கேட்டறிந்த நாளிலே ஒன்றும் சொல்லாமல் இருப்பானாயின், அவள் தன் நேர்ச்சையைச் செலுத்தவும், தான் கொடுத்த வாக்கின்படியெல்லாம் செய்து முடிக்கவுங்கடவாள்.
ECTA தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்; அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.