Versions
TOV ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
IRVTA வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
ERVTA வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ԅதேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான்.
RCTA ஆயக்காரனோ தொலைவில் நின்று, வானத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லி மார்பில் அறைந்து கொண்டான்.
ECTA ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். "