Bible Versions
Bible Books

Isaiah 12 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 அந்நாளில், நீ இவ்வாறு சொல்லுவாய்: "ஆண்டவரே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில் நீர் என் மீது சினங்கொண்டாலும், இப்பொழுது உமது சினம் தணிந்து விட்டது, நீரும் எனக்கு ஆறுதல் தந்தீர்.
2 இதோ கடவுள் தான் என் மீட்பு, அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், அஞ்சேன்; ஏனெனில் ஆண்டவரே என் வலிமை, அவரையே பாடுவேன், என் மீட்பு அவரே."
3 மீட்பின் ஊற்றுகளினின்று தண்ணீரை அகமகிழ்வோடு நீங்கள் முகந்து கொள்வீர்கள்,
4 அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.
5 ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள், ஏனெனில் மகிமைக்குரிய செயல்களைச் செய்தார்; உலகெங்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.
6 சீயோனின் குடிகளே ஆர்ப்பரியுங்கள், மகிழ்ச்சியினால் பாடுங்கள்; ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தர் உன் நடுவில் மேன்மையோடு விளங்குகிறார்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×