Bible Versions
Bible Books

Joshua 15 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 யூதாவின் புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த பங்கு வீதமாவது: ஏதோமுக்குத் தெற்கேயுள்ள சீன் என்ற பாலைவனம் துவக்கித் தென்புறத்துக் கடைசி எல்லை வரையாகும்.
2 அது உப்புக்கடலின் கடைகோடியாகிய தென்புறத்திலுள்ள முனையில் துவக்கும்.
3 அங்கிருந்து விருச்சிக மலைக்கும், அங்கிருந்து சீனுக்கும் போய், காதேஸ்பார்னேய்க்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு எழும்பிக் கல்காவைச் சுற்றிப்போன பின்பு,
4 அஸ்மோனாவை அடைந்து எகிப்தின் ஆற்றுக்குச் சென்று பெரிய கடலில் போய் முடியும். இது தென் எல்லையாகும்.
5 கீழ்ப்புற எல்லையாவது: உப்புக்கடல் துவக்கி, யோர்தானின் முகத்துவாரம் வரை, வட எல்லை கடலின் முனை துவக்கி மேற்சொல்லப்பட்ட யோர்தான் நதி வரை.
6 அவ்வெல்லை பெத்- அகிலாவுக்கு ஏறி வடக்கேயுள்ள பெத்- ஆராபாவைக் கடந்து ரூபனின் மகன் போயேனின் கல்லுக்கு ஏறிப்போகும்.
7 பின்னர் ஆக்கோர்ப் பள்ளத்தாக்கிலிருக்கிற தெபறு எல்லைகளை அடைந்து வடக்கேயுள்ள கல்காவுக்கு நேராய்ப் போகும்: கல்கா, அதொம்மிம் மலைக்கு எதிரே ஆற்றின் தென்புறத்தில் இருக்கிறது. பிறகு சூரியன் ஊற்று என்று அழைக்கப்பட்ட நீர்த்திடலைக் கடந்து ரோகல் என்ற கிணற்றுக்குச் சென்று,
8 அங்கிருந்து என்னொமின் மகனுடைய பள்ளத்தாக்கு வழியே போய், எபுசேயர் நாட்டிற்குத் தெற்கே சென்று யெருசலேம் நகரை அடைந்தபின், மேற்கிலிருக்கிற கெனோக்கு எதிரே இருக்கிற மலை மேல் ஏறி வடக்கிலுள்ள ராபாயிம் பள்ளத்தாக்கைத் தாண்டி,
9 அம்மலையின் உச்சியிலிருந்து நெப்தோவா எனப்படும் நீருற்றுக்குப் போய் எபிரோன் மலையின் ஊர்களுக்குச் சென்று பாலாவாகிய காரியத்தியாரீம், அதாவது, காடுகளின் நகரை அடையும்.
10 பாலாவை விட்டு மேற்கே செயீர் மலை வரை சுற்றிப் போய், பிறகு, வடக்கே கெஸ்லோன் முகமாயுள்ள யாரீம் மலைப்பக்கத்தில் சென்று பெத்சதமேசில் இறங்கித் தம்மனாவுக்குப் போய்,
11 வடக்கே சென்று அக்கரோனின் பக்கத்திலே திரும்பிச் சேக்கிரோனானை நோக்கி இறங்கி, அங்கிருந்து பாலா மலையைத் தாண்டி ஜெப்னெல் போய் மேற்கேயுள்ள பெரிய கடலோரத்தில் முடியும்.
12 யூதா புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி சுற்றிலும் அவர்களுடைய வம்ச வரிசைப்படி சுற்றிலும் நியமிக்கப்பட்ட எல்லைகள் அவையே.
13 ஆண்டவருடைய கட்டளையின்படியே ஜெப்போனேயின் மகன் காலேபுக்கு, யூதாவின் புதல்வருடைய பூமியின் நடுவே ஏனாக்கின் தந்தையினுடைய காணியாட்சியாகிய காரியாத்அர்பே என்ற எபிரோனை யோசுவா கொடுத்தார்.
14 காலேபோ அங்கே ஏனாக்கின் வம்சத்தாரான சேசாய், அகிமான், தோல்மாய் என்ற ஏனாக்கின் மூன்று புதல்வரையும் கொன்று போட்டான்.
15 அங்கிருந்து தாபீரின் குடிகளிடம் இறங்கிப் போனான். முதன் முதல் அந்தத் தாபீருக்குப் பெயர் கரியாத்- செப்பேர், அதாவது கல்விமாநகர் என்பது.
16 பொழுது காலேப், "கரியாத்- செப்பேரைப் பிடிப்பவனுக்கு என் மகள் அக்சாமை மணமுடித்துக் கொடுப்பேன்" என்றான்.
17 அதன்படி காலேபின் தம்பி கெனேசினி மகன் ஒத்தோனியேல் நகரைப் பிடித்தான். ஆகையால் தன் மகள் அக்சாமை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
18 அவர்கள் ஒன்றாய்ப் புறப்பட்டுச் செல்லும் வழியில், " உன் தந்தையிடம் ஒரு வயலைக் கேள்" என்று அவள் கணவன் அக்சாமைத் தூண்டினான். எனவே அவள் கழுதையின் மேல் சவாரி போகையில் பெருமூச்சு விடத் தொடங்கினாள். அதைக்கேட்டுக் காலேப் அவளை நோக்கி," ஏன்?" என்று வினவினான்.
19 அதற்கு அவள், "எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும். அதாவது, தென்புறத்திலிருக்கும் வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர் அன்றே ? அத்தோடு நீர்வளமுள்ள ஒரு நிலத்தையும் எனக்குத் தரவேண்டும்" என்றாள். அப்பொழுது காலேப் அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்வளமுள்ள மற்றொரு நிலத்தைக் கொடுத்தான்.
20 யூதா புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த சொத்து அதுவே.
21 தென்கோடியில் இருக்கும் ஏதோமின் எல்லை ஓரமாக யூதா புதல்வரின் கோத்திரத்துக்குக் கிடைத்த நகர்களாவன: கப்சையேல்,
22 ஏதேர், ஜாகூர், கீனா, திமோனா, அததா,
23 காதேஸ், ஆசோர்,
24 ஜெத்னம், சிவ்,
25 தெலேம், பாலோத், புது ஆசோர்,
26 ஆசோர் எனும் கரியொதெஸ்னோன், ஆமம், சாமா,
27 மொலாதா, ஆசேர்கதா, அசெமொன்,
28 பெத்பெலத், ஆசேர்சுவல், பெர்சபே, பசியொத்தியா,
29 பாஆலா, ஜிம்,
30 ஏசேம், எல்தொலாத்,
31 செசில், அர்மா, சிசெலக், மெதேமெனா,
32 சென்சென்னா, லெபாவொத், சேலிம், ஆயென், ரெம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.
33 சமவெளியில் எஸ்தாவோல், சாரேயா,
34 ஆசேனா, சானோயே, என்கன்னிம், தப்பவா,
35 ஏனாயிம், ஜெரிமோத், அதுல்லம், சொக்கோ,
36 அஜேக்கா, சராயீம், அதித்தாயீம், கெதெரா, கெதெரோத்தாயிம் ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
37 சானான், அதசா,
38 மக்தல்கத், தெலெயான், மசேப்பா, ஜெக்தல்,
39 லாக்கிசு, பாஸ்காத்,
40 ஏகிலோன், கெப்போன்,
41 லெகெமன், கெத்லீஸ், கிதெரொத், பெத்தாகன், நா ஆமா, மகேதா
42 ஆகிய பதினாறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
43 லபனா, ஏத்தேர், ஆகான், ஜெப்தா, எஸ்னா, நெசீப்,
44 கைலா, அக்சீப், மரேசா ஆகிய ஒன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.
45 அக்கரோனும் அதன் ஊர்களும் சிற்றூர்களும்.
46 அக்கரோன் துவக்கி கடல் வரை அசோத்தின் வழியிலுள்ள எல்லா ஊர்களும் சிற்றூர்களும்.
47 அசோத்தும் அதைச் சார்ந்த ஊர்களும் சிற்றூர்களும், காஜாவும், எகிப்தின் நதிவரை பரந்து கிடக்கும் ஊர்களும் சிற்றூர்களும். பிறகு பெரிய கடலே எல்லை.
48 மலையில்: சாமீர் ஜெத்தர், சொக்கொத்,
49 தன்னா, கரியத்சென்னா எனப்படும் தாபீர்.
50 அனப், இஸ்தேமோ, ஆனீம்,
51 கோசன், ஓலன், கிலோ ஆகிய பதினொரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
52 அராப், ரூமா, ஏசான்,
53 ஜானும், பெத்தாப்புவா, அப்பேக்கா,
54 அத்மாத்தா, கரியத் அர்பே அதாவது எபிரோன், சியோர் ஆகிய ஒன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.
55 மாயோன், கார்மேல், சீப்,
56 ஜோத்தா, ஜெஸ்ராயேல், ஜீக்கதம்,
57 சனோவே, அக்காயின் கபவா, தம்னா ஆகிய பத்து நகர்களும் அவற்றின் ஊர்களும்.
58 ஆலும், பேசூர், கெதோர்,
59 மரேத், பெத்தனோத், எல்தேக்கோன் ஆகிய ஆறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
60 கரியத்பவால் அதாவது கரியத்தியரிம் ஆகிய காடுகளின் நகர், அரேபா ஆகிய இரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
61 பாலைவனத்தில் பெத்தரபா, மெத்தின்,
62 சக்கக்கா, நெப்சன், உப்புநகர், என்காதி ஆகிய ஆறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.
63 யெருசலேமில் குடியிருந்த ஜெபுசையரை யூதா புதல்வர் அழித்தொழிக்க முடியாது போயிற்று. ஆகையால் இன்று வரை ஜெபுசையர் யூதா புதல்வரோடு யெருசலேமில் வாழ்ந்து வருகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×